பாகிஸ்தானில் பழங்குடியினரின் பள்ளிக்கூடம் தலீபான்களால் குண்டு வைத்து தகர்ப்பு
பாகிஸ்தானிலுள்ள தெற்கு வாஜிரிஸ்தான் பகுதியில் பழங்குடி இன மக்கள் அதிகம் வாழ்கிற இடத்தில் புதிதாக நிர்மாணக்கப்பட்டுவந்த அரசாங்கப் பள்ளிக்கூட்டம் ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமை (19) இரவு தலீபான் தீவிரவாதிகள் குண்டு வைத்துத் தகர்த்தனர்.
இந்த தாக்குதலில் உயிர்ப்பலி ஏதும் இல்லை. இருப்பினும் அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த 18 தொழிலாளர்களை தீவிரவாதிகள் கடத்திச்சென்றனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக பாகிஸ்தான் தலீபான் தீவிரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் அஜாம் தாரிக் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் ”அரசு பள்ளிக்கூடத்தை நாங்கள்தான் தகர்த்தோம். அது அரசு நிறுவனம் என்பதால்தான் தாக்குதல் நடத்தினோம். இதேபோன்று அரசு நிறுவனங்கள்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம்” என கூறி உள்ளார்.
leave a comment